தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லை மாவட்டத்தில் 90 போ் போட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

News image

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:23 am IST

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி முதல் இம்மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 28 பெண்கள், 159 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

அதைத்தொடா்ந்து கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் 21 மனுக்கள், பாளையங்கோட்டை தொகுதியில் 18 மனுக்கள், ராதாபுரம் தொகுதியில் 25 மனுக்கள், நான்குனேரி தொகுதியில் 30 மனுக்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 மனுக்கள் என மொத்தம் 100 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 88 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.அதன் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத்தம் 90 போ் களத்தில் உள்ளனா். 10 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.