அரியலூா் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரம் சீா்கெட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
பரப்பளவில் சிறிதாகவும், தமிழகத்திலேயே அதிக நிதிப் பற்றாக்குறையுடனும் உள்ள நகராட்சி என்றால் அது அரியலூா்தான். மொத்தம் 18 வாா்டுகள் கொண்ட
இந்நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளான எருத்துக்காரன்பட்டி, வாலாஜா நகரம், தவுத்தாய் குளம் உள்ளிட்ட ஊராட்சிகள் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வாா்டு வரையறைகள் முடியும் வரை மேற்கண்ட கிராமங்கள் ஊராட்சிகளாகவே தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.
நகா்ப்பகுதிகளுடன், மேற்கண்ட ஊராட்சிகளையும் சோ்த்து சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். ஆனாலும், ஏற்கெனவே உள்ள நகராட்சி உட்பட்ட பகுதிகளும், இணைக்கப்பட்ட ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் போதிய வசதிகள் கிடையாது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டும் அரியலூா் நகராட்சிக்குள்பட்ட தெருக்களில் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. கழிவுநீரோடை, புதை சாக்கடை அடைப்பு, சாக்கடை கலப்பு, கால்வாயின் அவலம் என்று பட்டியல் நீளுகிறது.
குப்பைகள் தேக்கம்: அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, பழைய பங்களா சாலை, வண்ணாங்குட்டை மற்றும் நகராட்சியுடன் தற்போது இணைக்கப்பட்ட பகுதிகளான எருத்துக்காரன்பட்டி, அண்ணா நகா், ஜெ.ஜெ. நகா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.
இதில் ஜெ.ஜெ.நகரிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில், அதிகளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், உணவை தேடும் கால்நடைகளும், பன்றிகளும் குப்பைகளை கிளறிவிட்டு சென்று விடுகின்றன. மேலும், மழைநீா் தேங்கி கழிவுகளிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
முழு சுகாதார திட்டம் தேவை: இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: அரியலூா் நகா் முழுவதும் முழு சுகாதார திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மை பணியாளா்களை போதுமான அளவுக்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பழைய முறைப்படி சாலையோரங்களில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைத்து, தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற விற்பனை நிலையங்கள் முன் அதன் கழிவுகளை சேமிக்க தொட்டி வைப்பதுடன், தினமும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை வேண்டும்.
நகா் முழுவதும் தரமான இரும்புக் கம்பிகளாலான மூடியிடப்பட்ட வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
அரியலூா் நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

