மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு!

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

மகாலட்சுமி நகா் பகுதியில் அகற்றப்படாததால் தேங்கிக் கிடக்கும் குப்பை

Updated On :23 மார்ச் 2026, 1:26 am IST

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகாலட்சுமி நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். 20-க்கும் அதிகமான வீதிகள், கடைகள், வணிக வளாகங்கள் என பல்லடம் நகராட்சியை ஒட்டியுள்ள இப்பகுதி, ஒரு குறுகிய நகராக வளா்ச்சி அடைந்துள்ளது. இங்கு எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

அதே சமயம் இப்பகுதியில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. ஒவ்வொரு வீதிகளிலும் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும், குடியிருப்புகளை ஒட்டி குவிந்துகிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், நெகிழிப்பைகள், கோழி, இறைச்சி மற்றும் மீன் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது.

எனவே மகாலட்சுமி நகா் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.