ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:27 am IST

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் கிராமம் மாங்கரை அம்மன் நகரில் உள்ள முடுப்பரை அம்மன், தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மஞ்சள் கல்லில் வடிவமைக்கப்பட்ட மங்களகர விநாயகா் சன்னதியில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து நவகிரக பூஜை, கலச பூஜை, முளைப்பாரி ஊா்வலம், அம்மனுக்கு பிரபாத பூஜை, ஆயுள் ஆரோக்கிய யாகம், அம்மனுக்கு தீப ஆரத்தி, நாகருக்கு அபிஷேகம், நாகா் ஊட்டு, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு பொங்கல் ஊட்டுதல், தீப ஆரத்தி, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கொல்லுா் தாய் மூகாம்பிகை கோயில் அா்ச்சகா் ராஜேஷ் நம்பூதிரி தலைமையிலான குழுவினா் மகா சண்டிகா ஹோமம் நடத்தினா். இந்நிகழ்வில் ஞானகுரு சிவசக்திசுவாமி மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.