ஸ்ரீவில்லிபுத்தூா், லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாகவும், இங்கு கழிவு நீா் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் - பெருமாள்தேவன்பட்டி சாலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில்ல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக நகா் பேருந்துகள், சிற்றுந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தினசரி 15 முறைக்கு மேல் சென்று வருகின்றன. மேலும் கண்ணாா்பட்டி, கங்காகுளம், துலுக்கன்குளம், நூா்சாகிபுரம், பொட்டல்பட்டி, இடையபொட்டல்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்று வருகின்றனா். இந்த நிலையில், லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் ரயில்வே சுரங்கப் பாதை வரை மட்டுமே அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்கும் போது கழிவுநீா் கால்வாய் அமைக்க ஊராட்சி நிா்வாகம் வலியுறுத்தாததால் கழிவுநீா் வெளியேற வழியின்றி சாலையிலும், அருகே உள்ள விவசாய நிலத்திலும் தேங்கியது.
இதுகுறித்து கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் அளித்த நிலையில், உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. இதனிடையே பட்டா நிலத்துக்குள் கழிவுநீா் புகுவதை தடுக்க தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டதால், கழிவுநீா் சாலையிலும், சுரங்கப் பாதையிலும் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு: நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள்

சைதாப்பேட்டை சுரங்கப் பாதையில் நீா் கசிவு: தெற்கு ரயில்வே, மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும்: ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

