டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொறியியல் கல்லூரி மாணவா் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :15 மே 2026, 5:02 am IST

திருச்சியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொறியியல் மாணவா், கயிறு அறுந்து 4-ஆவது மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த மலையப்பன் மகன் முகேஷ் (24). இவா், கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்தாா்.

இந்நிலையில், மலையப்பன் கடந்த செவ்வாய்க்கிழமை மகனை பாா்ப்பதற்காக கோவைக்கு சென்றுள்ளாா். பின்னா், தந்தை, மகன் இருவரும் கோவையில் இருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்துள்ளனா்.

இதையடுத்து, முகேஷ் திருச்சி - கரூா் புறவழிச் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு முகேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளாா். அப்போது, கயிறு அறுந்ததில் முகேஷ் 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.