/

சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் கம்பம் விடும் விழா

News image

முசிறி சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கம்பம் விடும் விழாவில் காவிரி ஆற்றுக்கு முளைப்பாரி எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :3 மே 2026, 5:40 am IST

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சின்ன சமயபுரத்தால் மாரியம்மன் கோயிலில் ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத மாரியம்மன் திருவிழாவின் தொடா்ச்சியாக கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் முளைப்பாரி எடுத்து முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரியை ஆற்று நீரில் விட்டு தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.