தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கௌமாரி அம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி பல்லக்கில் ஊா்வலம் வந்த சுவாமி.

Updated On :8 மே 2026, 12:34 am IST

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இரு வாரங்களாக நடைபெற்ற திருவிழாவில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் தொடங்கின. ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், ஆயிரங்கண் பானை, முளைப்பாரி சுமந்தும், அலகு குத்தி காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதமிருந்த பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் ‘ஓம் சக்தி, பராசக்தி‘ என முழக்கமிட்டனா். பெண்கள் குலவையிட்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வேளாளா் பெருமக்கள் சாா்பில் மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான டிராக்டா்களில் பெரிய அளவிலான பேரல்களில் மஞ்சள் நீா் நிரப்பப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது, பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் நீரைத் தெளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.