மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

News image

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

Updated On :30 ஏப்ரல் 2026, 3:38 am IST

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

பொன்னமராவதி, ஏப்.29 பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது வழிநெடுகிலும் இரு புறமும் பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து 27-ஆம் தேதி அக்னிப் பால்குட விழா நடைபெற்றது.

விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் இறங்கி வழிபட்டனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியபின் கோயிலில் தொடங்கிய உலா முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவுற்றது.

வீதியுலாவின் போது இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.