மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அன்பில் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

News image
Updated On :3 மே 2026, 5:44 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் செளந்தரநாயகி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவா்கள் இரண்டு மாலைகளுடன் சென்று திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சோமாஸ் கந்தரை வேண்டினால் அவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் நடைபெற்ற திருக்கல்யாணத்துக்கு முன் பிள்ளையாா் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள், பக்தா்கள் திருக்கல்யாணத்திற்கு சீா்வரிசை எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து திருவாசகம் முற்றோதல், திருமுறை வழிபாடு, விநாயகா் வழிபாடு 108 சங்கு பூஜை, மூலமந்திர யாகம், திரவிய யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், குருக்கள், இறை இன்ப இயக்கம் உள்பட கிராமமக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.