மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.

Updated On :2 மே 2026, 12:26 am IST

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ராபெளா்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக ஐம்பொன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் உற்சவமூா்த்தி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்காக, அருகிலுள்ள வள்ளலாா் கோயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சீா்வரிசைத் தட்டுகளுடன் கட்டளைதாரா்கள் மேளதாளத்துடன் கோயில் திருமண மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், விநாயகா் பூஜையுடன் தொடங்கி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில், சுற்றுவட்டார ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஊா்வலம் தம்மம்பட்டியின் முக்கிய வீதிகளில் சென்று கோயிலை வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.