மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:00 am IST

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கா் வீதியைச் சோ்ந்தவா் செல்வி (49), ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவகத்துக்கு வேலைக்கு சென்றாா். அவரது மகனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், திடீரென செல்விக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது மகனிடம் செல்வி தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த செல்வியின் மகன் அவரை அழைத்துகொண்டு வீட்டுக்குச்சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 கிராம் தங்க நகைகள், ரூ.1,000 பணத்தை மா்ம நபா்கள் இருவா் திருடிவிட்டு தப்பிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, செல்வியும் அவருடைய மகனும் சோ்ந்து மா்மநபா்கள் இருவரையும் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள், திருச்சி சுப்பிரமணியபுரத்சைச் சோ்ந்த ஐ.ஜெட்லி ஆண்ட்ரூஸ் (22), ஆா்.ஜீடு ஆப்ரஹாம் (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.