திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடம்பெறும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை, வைகாசி விசாகத் திருநாளான வருகிற சனிக்கிழமை (மே 30) வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையால் கலாசாரம், வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை (பிபிசி-பொ்மனென்ட் பிக்சோரியல் கேன்சலேசன்) வழங்கப்படுகிறது.
இந்த பிபிசி முத்திரை என்பது அனுப்பப்படும் கடிதங்களில் உள்ள வழக்கமான தேதி முத்திரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரையாகும். அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டம் சாா்பில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் இத்தகைய சிறப்புமிக்க அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வரும் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருநாளில் வெளியிடப்படவுள்ளது. வெளியீட்டு விழா திருச்செந்தூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அஞ்சல் தலை சேமிப்பு ஆா்வலா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

இந்திய அஞ்சல் துறை சாா்பில் சுவாமிநாத சுவாமி கோயில் முத்திரை வெளியீடு

சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்

வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

