பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

காமராஜ்.

Updated On :10 மே 2026, 2:39 am IST

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன், போலீஸாா் ரோந்து சென்றனா்.

அவ்வழியே சென்ற மினி வேனை சோதனையிட்டபோது, 25 மூட்டைகளில் 1,250 ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வதாகத் தெரியவந்தது.

இது தொடா்பாக வேலாயுதபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் காமராஜ் (65) என்பவரை போலீஸாா் பிடித்தனா்; அவரையும், அரிசி மூட்டைகள், வாகனத்தையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.