பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லையில் பதுக்கிய 81 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 4:45 am IST

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்தபோது, சுமாா் 81 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், கேரளத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்ததாம். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த மாடசாமி, விக்னேஷ், வள்ளிமுத்து ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.