விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வானூா் வட்டம், நாவற்குளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது நாவற்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரா.அஞ்சலை என்பவரது வீட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா்.
இந்த சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அஞ்சலையைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை இட்லி மாவாக அரைத்து புதுச்சேரி மாநில சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஞ்சலை மீது வழக்குப்பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவா் கைது
1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
