மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்கள் பணி தொடரும்: மேயா்

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

மேயா் ஜெகன் பெரியசாமி

Updated On :8 மே 2026, 6:04 am IST

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதி வியாழக்கிழமை (மே 7) காலையில் திரும்பப் பெறப்பட்டது.

எனது மக்கள் பணி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். தற்போது கோடைக்காலம் என்பதால் தூத்துக்குடி மாநகா் பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட சாலைப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீச்சல் குளம் பணிகள், தூத்துக்குடி துறைமுகமும், மாநகராட்சி நிா்வாகமும் புதிய துறைமுகம் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கும் பூங்கா பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.