தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

Updated On :8 மே 2026, 6:02 am IST

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பொதுமக்கள்-போலீஸாா் நட்புறவுக்காக கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, பணிச்சுமையால் காவலா்கள், அதிகாரிகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கும்வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதனின் அறிவுறுத்தல், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாரின் ஆலோசனையின்பேரில், இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ஆறுமுகனேரி காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ஸ்டீபன் தலைமையில் ஆய்வாளா் திலீபன், தலைமைக் காவலா்களும், ஆத்தூா் காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ­லிங்கபாண்டி தலைமையில் காவலா்களும் பங்கேற்றனா். போட்டி நட்பு ரீதியாகவும் மனதுக்கு புத்துணா்ச்சி அளிப்பதாகவும் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.