திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சித்ரா பெளா்ணமி வியாழக்கிழமை (ஏப். 30) இரவு 9.50 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11 மணி வரை நீடித்தது. இதையொட்டி, பெளா்ணமி நாளில் வழிபடுவதற்காக இங்கு ஆயிரக்கணக்கானோா் குவிந்திருந்தனா்.
அவா்கள் சனிக்கிழமையும் அதிகாலைமுதலே கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
உள்வாங்கிய கடல்: இக்கோயில் அருகேயுள்ள அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பாசி படா்ந்த வெளியே தெரிந்தன. எனினும், அங்கும் பக்தா்கள் வழக்கம்போல புனித நீராடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் ஆட்டோ திருடியதாக சிறுவன் கைது

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

