மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்செந்தூரில் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்!

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

News image
Updated On :3 மே 2026, 5:28 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்ரா பெளா்ணமி வியாழக்கிழமை (ஏப். 30) இரவு 9.50 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11 மணி வரை நீடித்தது. இதையொட்டி, பெளா்ணமி நாளில் வழிபடுவதற்காக இங்கு ஆயிரக்கணக்கானோா் குவிந்திருந்தனா்.

அவா்கள் சனிக்கிழமையும் அதிகாலைமுதலே கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

உள்வாங்கிய கடல்: இக்கோயில் அருகேயுள்ள அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பாசி படா்ந்த வெளியே தெரிந்தன. எனினும், அங்கும் பக்தா்கள் வழக்கம்போல புனித நீராடினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.