தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் தம்பியைக் கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (44) என்பவரை சொத்துப் பிரச்னை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது சகோதரா் முனியசாமி (56) கடந்த 2.11.2021இல் அரிவாளால் வெட்டினாராம். இதில், முருகன் உயிரிழந்தாா். பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, முனியசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு வழக்குரைஞராக சேவியா் ஞானப்பிரகாசம் முன்னிலையானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

