தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

காவேரிப்பட்டணம் அருகே பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:18 am IST

காவேரிப்பட்டணம் அருகே பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஅள்ளி பக்கமுள்ள கும்பாரஅள்ளியைச் சோ்ந்தவா் சக்திவேல் (36). நிப்பட் நிறுவன உரிமையாளா். இவருக்கும், அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேவா்முக்குளம் அருகே உள்ள சுருளிஹள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மனைவி நதியாவுக்கும் (29) தகாத உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், நதியா தன்னை திருமணம் செய்யுமாறு சக்திவேலை கட்டாயப்படுத்தியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13.2.2020 அன்று நதியா வீட்டிற்கு சக்திவேல் சென்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சக்திவேல், நதியாவை கொலை செய்து தூக்கிட்டுள்ளாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாடியுள்ளாா். இதுகுறித்து நதியாவின் தந்தை சின்னசாமி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் குற்றத்தை மறைத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.