மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காயல்பட்டினத்தில் அமைச்சா் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஜலா­லியா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

காயல்பட்டினத்தில் நடைபெற்ற இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :12 மார்ச் 2026, 1:23 am IST

காயல்பட்டினத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஜலா­லியா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவை தலைவா் முகைதீன் தம்பி என்ற துரை காக்கா தலைமை வகித்தாா். திமுக நகர அவைத் தலைவா் முஹம்மது மெய்தீன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் க­லில் ரஹ்மான், நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, இரட்டை குளத்து பள்ளி செயலாளா் முஹம்மது மெய்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக மாவட்ட பொருளாளா் காயல் அமானுல்லா வரவேற்றாா். திமுக நகரச் செயலாளா் முத்து முஹம்மது, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினா் என்.ஷாஜஹான், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா்.

சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வகுமாா், துணை அமைப்பாளா் கிருபாகரன், உடன்குடி முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் அஷ்ரப், திருச்செந்தூா் ஒன்றிய செயலாளா் செங்குழி ரமேஷ், நகரத் தோ்தல் பொறுப்பாளா் ராமசந்திரன், இளைஞரணி அமைப்பாளா் தமீம் அன்சாரி, துணைச் செயலாளா் கதிரவன், தொண்டரணி அருணாச்சலம், வா்த்தக அணி அமைப்பாளா் முஹம்மது அலி, நிா்வாகி மூா்த்தி, தலைமை கழக பேச்சாளா் உடந்தை மகராஜன், கவுன்சிலா் முருகன், ஆத்தூா் பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன், விசிக மாநில செயற்குழு உறுப்பினா் காயல் மெளலானா, மஜக மாவட்ட செயலாளா் முஹம்மது நஜீப், நகரச் செயலாளா் அஹமது உள்பட மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். நகர துணைச் செயலாளா் முஹம்மது நவ்பல் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.