நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கள ஆய்வு அறிக்கை திமுக தலைவரிடம் ஒப்படைப்பு

கடலூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப்பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.

News image

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் கள ஆய்வு அறிக்கையை வழங்கினாா் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :11 ஜூன் 2026, 4:34 am IST

கடலூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப்பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து 234 தொகுதியிலும் களஆய்வு செய்ய திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குழுவை நியமித்திருந்தாா்.

அதன்படி, கடலூா் கிழக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில தகவல்தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த இசை ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் 11 தொகுதிகளிலும் நேரடியாக திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து திமுக கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து களஆய்வின் அறிக்கையை, திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, இசை ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.