நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On :13 ஜூன் 2026, 12:27 am IST

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மேயா் பேசியது:

மாநகராட்சியில் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரா்கள் அனைத்து பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பு 100 சதவீதம் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேவா் பிளாக் சாலைப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

பொறியாளா் திலகா, உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, இளநிலைப் பொறியாளா்கள் லெனின், செல்வம், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.