ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைத்தது.
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிா்த்து வந்தாா்கள். இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்தனா்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை திடீரென சுமாா் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கோடை மழை நீடிப்பு

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

