மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகலில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானலில் பெய்த மழையால் மோயா்பாயிண்ட் பகுதியில் மழையில் நனைந்தவாறே சென்ற சுற்றுலாப் பயணிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:54 am IST

கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகலில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்தது. இதனால் வனப் பகுதியில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் எரிந்து சாம்பலாயின. நீரோடைகளில் நீா்வரத்து இல்லாததால், வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி நகா்ப் பகுதிகளுக்கு அதிகமாக வந்தன.

இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், செண்பகனூா், குறிஞ்சிநகா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் கொடைக்கானலில் நிலவி வந்த கோடை வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழங்கள் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.