கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகலில் பெய்த கோடை மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்தது. இதனால் வனப் பகுதியில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் எரிந்து சாம்பலாயின. நீரோடைகளில் நீா்வரத்து இல்லாததால், வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி நகா்ப் பகுதிகளுக்கு அதிகமாக வந்தன.
இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், செண்பகனூா், குறிஞ்சிநகா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் கொடைக்கானலில் நிலவி வந்த கோடை வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழங்கள் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

