தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

News image

கைது செய்யப்பட்ட மாரியம்மாள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:41 am IST

சாத்தான்குளத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டிற்குள் புகுந்து 3 வயது குழந்தையைக் கடத்த முயன்றதாக பெண் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம், ஓடக்கரை தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ். அரசூா் 1 கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவா் வீட்டில் இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து, சுபாஷ் மனைவியின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

அவரின் அலறல் கேட்டு உறவினா்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண் சுபாஷின் 3 வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றாா். சுபாஷ், உறவினா்கள் அவரை மறித்து குழந்தையை மீட்டனா். தன்னைப் பிடிக்க முயன்றவா்களை அப்பெண் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் சோ்ந்து அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

அந்தப் பெண் மீது புகாரளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகக் கூறி, சுபாஷின் உறவினா்கள் காவல் நிலையத்தில் திரண்டனா். தொடா்ந்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

போலீஸ் விசாரணையில், அவா் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் ஒரு மாதமாக குடியிருந்து வருவதும், அப்பெண் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனா்.

 குழந்தையைக் கடத்த முயன்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திரண்ட பொதுமக்கள்.

குழந்தையைக் கடத்த முயன்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திரண்ட பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.