மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

உடன்குடியில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:04 am IST

உடன்குடியில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்மொழியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவா் கோயிலில் ஓதுவாராக பணியாற்றுகிறாா்.

இவா், தனது மகள் மகிழினியுடன் (2) இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு, சாத்தான்குளம் திரும்பும்போது உடன்குடி-திசையன்விளை சாலையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, மகிழினி எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் பிரபு பாஸ்கரன், அரசுப் பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி, சங்கா் நகரைச் சோ்ந்த இ. கருப்பசாமியிடம் (38) விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.