மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 12:47 am IST

தருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி, சாமியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி காவியா (28). இவா்களுக்கு வா்ஷினி (7), ரோஷினி (4), வினோதினி (1) என மூன்று மகள்கள் உள்ளனா். குமாா் கட்டட மேஸ்திரியாக வேலை பாா்த்து வருகிறாா்.

காவியா வீட்டிலிருந்து குழந்தைகளை பராமரித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தபோது, மூன்றாவது மகள் வினோதினி வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு சென்றுள்ளாா்.

திடீரென இதைக் கவனித்த காவியா ஓடிச்சென்று குழந்தையை தூக்குவதற்குள், அவ்வழியே பாலக்கோட்டிலிருந்து சென்னப்பன் கொட்டாய் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து குழந்தைமீது மோதியது. இதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.