பெருமாநல்லூா் அருகே சாலை கடக்க முயன்ற 4 வயது குழந்தை லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தது.
பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (34). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். மகள் மிருதுளா (4).
இந்நிலையில், மிருதுளா மற்றும் 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினா் முத்துலட்சுமி எஸ்.எஸ்.நகா் பகுதியில் உள்ள கடையில் ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வீட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது சாலையை கடப்பதற்காக குழந்தைகளுடன் சாலை நடுவே உள்ள தடுப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளாா். இந்நிலையில், மிருதுளா திடீரென சாலையைக் கடப்பதற்காக ஓடியுள்ளாா். அப்போது சேலத்தில் இருந்து அன்னூா் நோக்கிச் சென்ற லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி மிருதுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மோகன் (47) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

பொக்லைன் இயந்திரம் மோதி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

