தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம், நாசரேத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:27 am IST

சாத்தான்குளம், நாசரேத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், தேமுதிக நகர துணைச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் மகா இளங்கோ வரவேற்றாா்.

திமுக மாவட்டப் பிரதிநிதி வேல்துரை, நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தட்டாா்மடத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையிலும், முதலூரில் மத்திய ஒன்றியச் செயலா் பொன். முருகேசன் தலைமையிலும், நாசரேத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பிரதிநிதி தாமரைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.