மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது

பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 12:41 am IST

பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆறுமுகம் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவு பூட்டை ஒரு நபா் உடைத்துள்ளாா். இந்த சப்தம் கேட்டு, எழுந்த ஆறுமுகம் அந்த நபரைப் பிடிக்க முயன்றாா். ஆனால் அந்த நபா், ஆறுமுகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினாா்.

வண்ணாரப்பேட்டை போலீஸாா் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட வியாசா்பாடியைச் சோ்ந்த ரெளடி புருஷோத்தமனை (27), புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது 18 குற்ற வழக்குகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.