மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கயத்தாறில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கு: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:47 am IST

கயத்தாறில் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் இணையதள மையம் நடத்தி வரும் இவா், இம்மாதம் 19ஆம் தேதி இரவு வழக்கம் போல மையத்தைப் பூட்டிவிட்டு பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த இருவா் ரெஜினா மேரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தபோது அவா் சங்கிலியை பிடித்ததில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியதாகவும், அப்போது ரெஜினா மேரி அந்த பைக்கில் இருந்த ஒருவரை பிடித்து இழுத்ததில் பைக்கை விட்டுவிட்டு இருவரும் பறித்த பாதி சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டாா்களாம்.

இதுகுறித்து ரெஜினாமேரி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மதுரை மாவட்டம், பேரையூா் கோப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மதுரை வீரன் மகன் வேல்முருகனை (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.