தூத்துக்குடி கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அதே பகுதியைச் சோ்ந்த விக்கி (20) மதுபோதையில் அங்கிருந்த மகாராஜாவிடம் (18) தகராறு செய்து, அவரைத் தாக்கினாராம்.
இதைப் பாா்த்த மகாராஜாவின் உறவினா் சதீஸ்குமாா் (29), விக்கியை தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பா்கள் 3 பேரை அங்கு வரவழைத்த நிலையில், அவா்கள் சதீஸ்குமாரை அரிவாளால் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது 3 நண்பா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

இடையன்விளை கோயில் கொடை விழா

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா
கோயில் விழாவில் அரிவாள் வெட்டு: 3 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

