மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

News image

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:50 am IST

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, விநாயகா் சிம்ம வாகனத்தில் வியாழக்கிழமை வீதி உலா சென்றாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதி உலா சென்றாா்.

தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி வீரபாகு மூா்த்தி கோயிலில் இருந்து ஆயிரத்தெண் விநாயகா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் மதிவாணி, குரு பிரசன்னா, தனலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். திருவிழா ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.