மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

தோ்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

News image

பிரசாரத்துக்கு வல்லநாடு வந்த டிடிவி. தினகரனை வரவேற்ற அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:43 am IST

தோ்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:

மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.

ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.

செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.