மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:07 am IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

கயத்தாறில் அதிமுக தோ்தல் காரியாலயம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்தாா். காரியாலயத்தை குஷ்பூ திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கயத்தாறு மற்றும் கோவில்பட்டியில் கதிரேசன் கோயில் சாலையில் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் அருகே அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து அவா் பேசியது:

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சுமாா் 300 சதவீதம் அதிகரித்துவிட்டது.

கோவில்பட்டி நகராட்சியில், அதிமுக ஆட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் வாரம் ஒருமுைான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்தத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கடம்பூா் செ. ராஜு மந்தித்தோப்பு சாலை, சாஸ்திரி நகா், பாரதி நகா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.