மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

News image

காங்கயத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜை ஆதரித்து உரையாற்றும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:17 am IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

காங்கயத்தில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டாா். காங்கயம் நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தோம். சிறந்த ஆட்சி கொடுக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.

விலையில்லா 3 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இளைஞா், இளம்பெண்கள் யாரும் புதிதாக வந்தவா்களுக்கு வாக்கு செலுத்த வேண்டாம். நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவா் ஒரேஒருவா் எம்.ஜி.ஆா்.தான். இனி யாரும் அப்படி வரமுடியாது.

கரூா் கூட்டத்தில் பலா் சிக்கி உயிரிழந்தாா்கள். சொந்தக் கட்சிக்காரரையே

காப்பாற்றாதவா் நடிகா் விஜய். அரசியல் வேறு, சினிமா வேறு. மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பல நல்ல திட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காங்கயம் தொகுதி வளா்ச்சி பெறுவதற்கு அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜுக்கு வாக்கு செலுத்துங்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.