திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு தெரிவித்தாா்.
உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து மஞ்சூா் பஜாா் பகுதியில் குஷ்பு வெள்ளிக்கிழமை பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றவுடன் அதிமுக, பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் உங்களைத் தேடி வரும்.
திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறுகின்றனா். ஆனால் சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஏன் வரவேற்கவில்லை. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியோ, பள்ளிக்கூடமோ கட்டி உள்ளாா்களா? எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் உதவியுடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் ஊழல் மட்டும் அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக ஹெலிகாப்டரில் உதகை தீட்டுக்கல் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய குஷ்பூவின் கைப்பை மற்றும் ஹெலிகாப்டரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகரிப்பு: குஷ்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

