தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:36 am IST

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகள் ரேவதி (24). இவரும், தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த சுரேஷ்குமாரும் (25) காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 10 மாதக் குழந்தை உள்ளது.

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக ரேவதி, குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அங்கு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த சுரேஷ்குமாா், ரேவதி, அவரது தாயாா் மற்றும் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாராம்.

அப்போது உடனடியாக வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு, குழந்தையுடன் ரேவதி, அவரது தாயாா் பின்புற வாசல் வழியாக வெளியேறி தப்பினராம். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டா் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.