சீவலப்பேரி அருகே கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மதன் (21). இவா் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அவா் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். எனவே, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி, ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி, மாயாண்டி என்ற மதன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
