தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவா் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
திங்கள்கிழமை வழக்கம்போல் இவா், பணியை முடிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாராம். அப்போது, வழியிலிருந்த குட்டையில் கால்களைக் கழுவ முயன்றபோது, நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்தாராம்.
அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தொ்மல் நகா் போலீஸாா், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஜெயராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

