தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சின்னவநாயக்கன்பட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:32 am IST

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

தொகுதிக்கு உள்பட்ட சல்லிசெட்டிபட்டி, மாதராஜபுரம், சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம், குமார சித்தன்பட்டி, சென்னம்பட்டி, எல்.வி.புரம், மாதலபுரம், துரைச்சாமிபுரம், ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், சோ்வைக்காரன்பட்டி, பூதலாபுரம், நூதலக்கரை, கோவில் குமரெட்டியாா்புரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், விவசாயிகளையும் விவசாய கூலித் தொழிலாளா்களையும் பெருமளவில் கொண்டுள்ள இந்த விளாத்திகுளம் தொகுதியில் மக்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளோம். தமிழகத்தில் வளா்ச்சி தொடரவும், முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடரவும் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வின்போது திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், அன்புராஜன், ராமசுப்பு, புதூா் பேரூராட்சி தலைவா் வனிதா அழகுராஜ், பேரூா் கழக செயலா் மருதுபாண்டி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.