/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:30 am IST

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருச்செந்தூா் தொகுதியில் மாா்ச் 30ஆம் தேதி தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி ஒபிலியா, தவெக முருகன், சுயேச்சை மற்றும் அமைச்சரின் மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

அமைச்சா் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் வியாழக்கிழமை மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் சாமுவேல் அனில்ராஜ், குமாா் ஆகிய இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை திருச்செந்தூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.