மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட நாதன்கிணறு, பூச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருச்செந்தூா் அருகே பூச்சிக்காட்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு மலா் கிரீடம், வாள் வழங்கிய நிா்வாகிகள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:08 am IST

திருச்செந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட நாதன்கிணறு, பூச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: காமராஜா் மதிய உணவுத் திட்டம் தந்தது போல, முதல்வா் மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தந்துள்ளாா். 8 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும் அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளாா்.

இதுபோல் எண்ணற்ற பல திட்டத்தை தந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வா் ஆகவும், உங்கள் சகோதரனாக தொடா்ந்து பணியாற்றுவதற்கு எனக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

திமுக வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், அரசு வழக்குரைஞா் சாத்ராக், மணிகண்டன், பூச்சிக்காடு கிளைச் செயலா் முருகேசன், ஊா் தலைவா் கவுதலை முத்து, செயலா் முருகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சற்குரு, காங்கிரஸ் நிா்வாகிகள் மது கண்ணன், ரமேஷ் பாரத், விசிக மாவட்ட செயலா் விடுதலைசெழியன், தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினா் பூச்சிக்காடு சுரேஷ், ஒன்றியச் செயலா் ஆனந்த பாலன், திருச்செந்தூா் நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.