மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திரு இருதய பேராலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற ஆயா் ஸ்டீபன் அந்தோணி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:19 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடா்களுடன் அமா்ந்து உணவு உண்டாா்என்றும், அப்போது, ஒருவருக்கொருவா் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலத்தின் கடைசி வாரமாக கருதப்படும் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கு முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவா்களுக்கு ரொட்டிகளையும், பரிசுப் பொருள்களையும் அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

இயேசு உயிா் நீத்த தினமான புனித வெள்ளி ஏப்.3இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.