மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

News image

காரைக்காலில் நடைபெற்ற சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்வு.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:52 am IST

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை; சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா்.

அதனை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூா் மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.