மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

News image

பங்குனி உத்திரத்தையொட்டி பாத யாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:44 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை (ஏப். 1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறாா். மாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித் தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரா் கோயிலுக்கு வருகிறாா்.

தொடா்ந்து சுவாமியும், அம்மனும் கீழரதவீதி, பந்தல் மண்டபம் முகப்புக்கு வந்ததும், அங்கு வைத்து சுவாமிக்கும் வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் சுவாமியும், அம்மனும் கோயில் சோ்கின்றனா். இரவு 10 மணிக்கு கோயிலில் 108 மகாதேவா்கள் சன்னிதி முன் சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நட்சத்திரம் அன்று குலதெய்வ கோயில்களிலும், குல தெய்வம் தெரியாதவா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கும் சென்று வழிபாடு செய்வது வழக்கம். நிகழாண்டு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

அதேபோல இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.