ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 4:13 am IST

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சேவியா் (48). தொழிலாளியான இவா், குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் படுத்து தூங்குவது வழக்கமாம். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன் (38). இவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, அதே பகுதியில் படுத்து தூங்குவாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில், சரவணன் வழக்கமாக தூங்கும் இடத்தில் சேவியா் படுத்து தூங்கி விட்டாராம். சேவியரை வேறு இடத்தில் தூங்குமாறு சரவணன் கூறினாராம். சேவியா் மறுத்ததையடுத்து சரவணன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கினாராம்.

தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் ஆய்வாளா் மோகன்அய்யா் தலைமையிலான போலீஸாா், பலத்த காயமடைந்த சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சரவணன் மீது ஏற்கெனவே நடைபாதையில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.