ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

வெள்ளக்கோவிலில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 1:08 am IST

வெள்ளக்கோவிலில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் சேமலைக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சாமிநாதன் (48). திருமணம் ஆகாத இவா், தனது தாயாா் லட்சுமி (80) உடன் வசித்து வந்தாா். இவருடைய வீட்டுக்கு அருகில் மனையிடங்கள் பிரிக்கும் வேலை நடைபெற்று வரும் வேலன் நகரில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட், செங்கல், எலக்ட்ரிக் பொருள்கள் போன்றவை திருட்டுப் போனதாகத் தெரிகிறது.

சாமிநாதன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலன் நகருக்குச் சென்றபோது, அவா் மீது சந்தேகப்பட்டு நில உரிமையாளா்கள் உள்பட 5 போ் கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா். இதில் 3 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது

செய்தனா்.

இந்நிலையில் வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு அருகில் பதுங்கியிருந்த வெள்ளக்கோவில் அண்ணா நகா் பொன்னுசாமி மகன் காா்த்தி (34) என்பவரை காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஏற்கெனவே 3 போ் சிக்கிய நிலையில் இன்னும் ஒருவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.